skip to main | skip to sidebar

Wednesday, August 3, 2011

3D- யில் உலாவலாம் வாருங்கள்

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது இப்பொழுது அனைவரும் 3D என்னும் புதிய அறிய தொழில்நுட்பத்தின் பிடியில் உள்ளனர் . சினிமா துறையிலும் சரி கணினித்துறையிலும் சரி இப்பொழுது 3D-யின் மோகம் அதிகரித்து கொண்டே போகிறது. நிறைய நபர்கள் 3D யில் வேலை பார்ப்பதை இப்பொழுது விரும்புகிறார்கள். இப்பொழுது 3D டெஸ்க்டாப் என்ற ஒரு மென்பொருளை பற்றி இணையத்தில் படித்தேன் இதை பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அதை பற்றி படித்து கொண்டிருந்தபோது தான் இந்த 3D உலாவியை பற்றி தெரிந்துகொண்டேன்.

இந்த உலாவி மூலம் நீங்கள் இணையதளங்களை 3Dயில் பார்வையிடலாம் அது மட்டுமல்ல இந்த தளத்தில் உள்ள தேடுபொறியில் சொற்களை சொடுக்கினால் அதுவும் 3D-யில் தான் தோன்றும்.இந்த தளத்தில் GOOGLE, YOUTUBE, WIKIPEDIA போன்ற தளங்களில் இருந்து தேடலாம்.

இந்த தளத்திற்கு செல்லுங்கள் பின்னர் அதில் இடது பக்கத்தில் உள்ள மெனுவில் தளத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் பின்னர் குறிச்சொற்களை அதில் உள்ளீடு செய்யுங்கள் அந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடுவது கிடைக்கும்.உதாரணத்திற்கு நீங்கள் YOUTUBE-இல் ஹாக்கிங் பற்றிய வீடியோ கோப்புகளை தேடுவதற்கு மேலே YOUTUBE-ஐ தேர்வு செய்யுங்கள் பின்னர் HACKING என்று தட்டாசு செய்யுங்கள் பின்னர் SEARCH பொத்தானை அழுத்துங்கள் நீங்கள் தேடுவது அழகாக உங்களுக்கு கிடைக்கும்.

இந்த தளத்தில் நீங்கள் அந்த மென்பொருளை பதிவிறக்கி கொள்ளலாம்.

இந்த தளத்திற்கு செல்ல இதை சொடுக்கவும் : SPACETIME






இந்த தளத்தில் அந்த உலாவியை பதிவிறக்கி கொள்ளவும். பின்னர் அதை நிறுவிக் கொள்ளவும் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த மென்பொருளை திறக்கவும் அதில் உள்ள ADDRESS BAR-இல் தளத்தை தட்டாசு செய்யுங்கள் பின்னர் நீங்கள் 3D-யை கண்டு ரசியுங்கள்.மேலும் இதில் BOOKMARKS, FAVORITES ஆகியவை டூல்பரிலேயே இருக்கிறது. மேலும் இது இப்போதைக்கு விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டும் தான் இயங்குகிறது.

மேலே உள்ள தளத்தில் பதிவிறக்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டியின் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள்.

அதற்க்கான சுட்டி




இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்













1 comments:

  1. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

    தொழுகை

    ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

    கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

    ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

    அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

    இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

    ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

    தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

    ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

    உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

    இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

    உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

    தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

    நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

    உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

    பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

    "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

    இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

    தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

    இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

    தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

    நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

    தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

    தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

    வாஞ்சையுடன் வாஞ்சூர்.

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets